Montag, 4. Mai 2015

வரலாறு

பர்வதவர்த்தினி சமேத இராமலிங்கேஸ்வரர்

யாழ்ப்பாணத்தின் மேற்கு திசையில் அமைந்திருக்கின்ற சப்த தீவுகளில் ஒன்றான புங்குடுதீவிலேயுள்ள ஊரதீவிலே
ஐந்திணைச் சூழல் கொண்ட பாணாவிடை என்னுமிடத்தில் இலிங்க வடிவிலே அருவுருவமாய் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கிறார் பர்வதவர்த்தினி சமேத இராமலிங்கேஸ்வரப்பெருமான். இவ்வாலயத்தின் தோற்றம் பற்றிய வரலாறு தெளிவின்றி இருப்பினும் இது ஒரு பழமையான தலமென்பது குறிப்பிடத்தக்கது.
இங்கே நிலவிவரும் மரபுவழிக்கதைகள் பிரகாரம், தீவகத்தை பூர்வீகமாகவும் வண்ணார்பண்ணையிலே வசித்து வந்தவருமான மருதப்பு என்பார் 1910ம் ஆண்டு தமிழ்நாட்டின் இராமேஸ்வரம் திருப்பதிக்கு சென்று சிவனை வழிபட்டு வந்தார். ஒரு நாள் இராமலிங்கேஸவரப்பெருமான் இவர்கனிவிலே தோன்றி புங்குடுதீவுக்காட்டிலே தன்னை வந்து தரிசிக்குமாறு கூறியருளினார். இவர் உடனேயே புங்குடுதீவிற்கு திரும்பிவந்து நீள்சதுரவடிவில் சிவலிங்கமாய் எழுந்தருளியிருந்த இராமலிங்கேஸவரரை கண்டானந்தித்தார். இந்நிகழ்வு 1911இலே நடைபெற்றதாக கூறுவர். மருதப்புவை ஊரார் மருதப்பு சுவாமியென அழைத்து மகிழ்ந்தனர்.
சிவத்தொண்டராகிய மருதப்பு சுவாமிகள் அந்த ஆண்டிலேயே திருநாவுக்கரசு சுவாமிகளை நினைவுகூர்ந்து சரியைத்தொண்டினைச் செய்யும் வகையில் சித்திரைச் சதயத் தினத்தன்று திருநாவுக்கரசு சுவாமிகளின் குருபூசையை ஆரம்பித்தார். அக்காலகட்டத்தில் அவ்வூரிலே வாழ்ந்த சிவத்தொண்டராகிய மாணிக்கம் என்பார் மருதப்பு சுவாமிகளுக்கு உறுதுணையாய் நின்றார். நன்னீர் பற்றாக்குறையாக இருந்த அவ்விடத்திலே தண்ணீர்ப்பந்தல் அமைத்து சேவையாற்றி வந்தார். இச்சேவையானது அவரது சந்ததியரால் நீண்டகாலம் வரை நடைபெற்று வந்தது. இக்காலப்பகுதியிலே அலயத்தின் முன்னிருந்த காணியை அதன் உரிமையாளர்கள் ஆலயத்திற்கு சாசனம் செய்து கொடுத்தனர்.
மாணிக்கம் அவர்கள், 1930ம் அண்டிலே சிறார்கள் கல்வி கற்பதற்கென ஆலய வளவில் திருநாவுக்கரசு வித்தியாலயத்தையும் ஆரம்பித்து அன்னதான மடத்தையும் அமைத்தார். இராமலிங்கேசுவரரைநாடி மக்கள் வந்து தம் இன்னல் போக்கி சென்றார்கள். ஆலயம் சிறிது சிறிதாக திருப்பணி செய்யப்ட்டு 1948இலே இறைவன் திருவருளால் மகா கும்பாபிடேகம் நடைபெற்றது. கும்பாபிடேகம் அவ்வூர் மக்களை கொண்ட பரிபாலன சபையால் நடாத்தப்பெற்றது. மருதப்பு சுவாமிகள் நல்ல வழிகாட்டியாய் இருந்து வந்தார். தொடர்ச்சியாக ஆலயம் பல திருப்பணிகளை கண்டு 1980ம் வருடம் இரண்டாவது கும்பாபிடேகம் நடைபெற்றது.
தொடர்ச்சியாகவும் பல பெருந்திருப்பணிகள் செய்யப்பட்டு 2002ம் வருடம் பங்குனி மாதம் மூன்றாவது கும்பாபிடேகம் நடைபெற்றது. இவ்வாலயத்தின் முற்பகுதியிலே பூரணை புட்கலை சமேத ஐயனார் ஆலயமும் இருக்கின்றது. இதனால் இவ்வாலயத்தை ஊரார் ஊரதீவு ஐயனார் எனவும் அழைத்தின்புறுவர். இவ்வையனார் ஆலயம் 1850ம் வருடம் அமைக்கப்பட்டதாக அறியப்படுகின்றது.
இவ்வாலயதிற்கு சிறிது தொலைவிலேயே மருதப்புசுவாமிகளின் சமாதிக்கோவிலும் அமைக்கப்பட்டுள்ளது.

திருவிழா உபயகாரர்கள்

____திருவிழா உபயகாரர்கள் _____________________-

i.முத்தர் குழு .-போ-மதியாபரணம்
2.பொ.சிவமணி வேலணை
3.சி.நல்லதம்பி குழு
4.திருமதி நா.இ.அருணாசலம்  குழு
5.நா.ஜெயக்குமார் (பாபு-சுவிஸ் )
6.திருமதி க.மார்க்கண்டு புங்குடுதீவு
7.முருகர் குழு பொ.கந்தையா
8.காசிநாதர் குழு   இ.பேரம்பலம்
9.ஆ.பேரின்பநாதன் உறவினர்கள்
10.க.சோமஸ்கந்தர் குழு கு.முத்துக்குமார்
11.பொ.பாலசிங்கம் குழு
வைரவர் மடை சே.கேதீஸ்வரன்
ஐயனார் அபிசேகம் சி.க.நல்லையா கனடா



திருவூஞ்சல் பாடல்கள்

புங்குடுதீவு பாணாவிடைப்பதி 
ஸ்ரீ பர்வதவர்த்தனி அம்பாள் சமேத இராமலிங்கேஸ்வரர் 
                     திருவூஞ்சல் 
                              காப்பு
பொன்னிலங்கு ஈழத்து ராமேஸ்வரப்
       பூங்குடியின் பாணாவிடைத் தலத்தில் மேவும்
அன்னை பர்வதவர்த்தனி சமேதரராகி
      அரனார் ராமலிங்கேஸ்வரர்  மகிழ்ந்தே
கன்னல் தமிழ் திருவூஞ்சல் தனிலே வைதி
      களித்தாட ஊஞ்சலிசை  பாடி ஏத்த
 வன்னமருப்  பழகனான வார  ணனின்
      வளந் திகழும் செஞ்சரணம் காப்பு தாமே.


 வேத நாற்பவளத் தூண் விளங்க நாட்டி
         விரிந்த சிவா கமவயிர விட்டம் பூட்டி
நாதமாம் கலை ஞானக் கயிறு மாட்டி
        நாவினஓங் காரமெனும் பீடம் தேக்கு
மாதவளாம் பர்வதவர்த் தனியா ளோடு
       மருவுதமிழ்த்  திருவூஞ்சல் தனிலே வைகி
ஈதல்நிறை பூன்குடியின் பாணாவிடை
     இராமலிங்கேஸ்வரரே ஆடீர் ஊஞ்சல்

அன்பொழுகும் கால் நிறுத்தி ஆத்மஜீவன்
         ஐந்து புலன் விட்டமத்தை ஒன்றாய்ச்  சேர்த்தே
இன்புறு நாற் கரணவடம் இழுத்தே மாட்டி
         இணைந்த திரு வருளென்ற  பீடம் தேக்கி
என்புருகப் பேரின்ப முத்தியூஞ்சல்
        எழிலாக ஜீவன் அவன் ஆடருள் செய்
இன்பதியாம் பூங்குடியின் பாநணாவிடை
         இராமலிங்கேஸ்வரரே ஆடீர்  ஊஞ்சல்

பணியரவு மதிச்சடையின் குஞ்சி ஆடப்
         பால் வெண்ணீற்றழகினொடு நுதலும் ஆட
குனிவு தவழ் புருவச் செவ்விதழ்கள் ஆட
         குமிழ் இதழின் நகை அழகு கொஞ்சி ஆடப்
புனையு குண்டலங்களோடு தோடும் ஆட
        புலித்தோலின் உரியாடல் பூணூல் ஆடப்
இனியபதி பூங்குடியின் பாணா விடை
        இராமலிங்கேஸ்வரரே ஆடீர் ஊஞ்சல்

பரைபர்வ தவர்த்தனி மருவி ஆட
        பாம்பினா பரணங்கள் சுழன்றே ஆட
வரை கடந்த அருள் நல்கும்வரதமாட
        வரும் அடியார் பயம் தீர்க்கும் அபயமாட
நிரை  நிரையாய் நின்வாசல் நிற்கும் பக்தர்
         நித்திலம் சேர் ஆனந்தவிழி நீராட
 இறைகடல் சூழ் பூங்குடியின் பாணா விடை
        இராமலிங்கேஸ்வரரே ஆடீர் ஊஞ்சல்

துலங்கரத் துடியதுவும் ஒலித்தே ஆட
       தீப்பிழம்பின் அனந்த ஜோதி கரத்திலாட
கலங்கு விழி மானாட  மழுவும் ஆட 
காதல் மிகு பர்வதவர்த்தனி யாளுமாட
      தலங்கரையின் கடலாட அலைகளாட
தந்த முகத்தையனவன் கூத்துமாட
      இலங்குபதிப் பூங்குடியின் பாணாவிடை
இராமலிங்கேஸ்வரரே ஆடீர் ஊஞ்சல்



பனகவணி க் கபாலவட மாலை ஆடப்
        பர்வதவர்த்தனியாலளும் மருவி ஆடக் ¨
கனக வட அக்கமணி வடமுமாடக்
         கண்டமதில் நீலகண்டம் மிளிர்ந்தே ஆட
சனகசனந் தனர் நால்வர் பாடி ஆட
         சாரங்கன் பிரம்மனொடு தேவர் ஆட
இனமலர் சூழ்பூங்குடியின் பாணாவிடை
         இராமலிங்கேஸ்வரரே ஆடீர் ஊஞ்சல்

ஞாயிறு திங்கள் அக்னிக் கண்களாட 
         ஞானியர்போற்று  செவ்வாய் முறுவல் ஆட 
தோயுசம்பு தன்கழுத்தில் வியாழன் ஆட 
        திருப்பாத வெள்ளிச் சிலம்புமாட 
ஆலவிடை தனிலே ஆசனிக்கும் 
        அம்மைபர்வ தவர்த்தனி அருளை அள்ளி 
ஈயுதலம் பூங்குடியின் பாணா விடை 
       இராமலிங்கேஸ்வரரே ஆடீர் ஊஞ்சல்

மண் சுமந்த பிட்டுண்ட களைப்பும் தீர
        மன்னன் அன் றடித்த அடி வலியுமாறக்
கண்ணெழு ந்த குருதி சொரி  நோவுமாற
       கண்ணப்பன் கால் பட்ட தழும்புமாற
பண் சுமந்த சுந்தரர் சொற் பித்தம் நீங்க
       பரவைக்கு தூது சென்ற பாதம் தாங்க
அண்ணலருள் பூங்குடியின் பாணாவிடை
       இராமலிங்கேஸ்வரரே ஆடீர் ஊஞ்சல்

தென்னிலங்கை வேந்தனவன் இராவணேசன்
       தினவெடுத்த தோள்களினால் மலையைத் தூக்க
சென்னியிற்  கால் விரல்  ஊன்றிச்  செருக்கும் தீர்த்த
       செவியார வீணையிசை கேட்பாய் தேவா
இன்னிசை பூங்குடியின் பாணா விடை
        இராமலிங்கேஸ்வரரே ஆடீர் ஊஞ்சல்

சங்கரனே சாம்பசிவா ஆடீர் ஊஞ்சல்
          சாரங்கன் மைத்துனரே ஆடீர் ஊஞ்சல்
துங்கமுகன் தந்தையே நீர் ஆடீர் ஊஞ்சல்
          தோகை வேலன் சீடரே நீர் ஆடீர் ஊஞ்சல்
திங்களணி வேணியரே ஆடீர் ஊஞ்சல்
          திருக்கைலாசத் துறைவோ ய் ஆடீர் ஊஞ்சல்
இங்கிதம் சேர் பூங்குடியின் பாணா விடை
          இராமலிங்கேஸ்வரரே ஆடீர் ஊஞ்சல்

                               வாழி
மறையோதும் வானவரும் மாரி  வாழி
            மாதுபர்வ தவர்த்தனி அம்மை வாழி
குறை ஏதும் இல்லாத செங்கோல் வாழி
             குவலயத்தில் மாதரவர் கற்பும் வாழி
நிறைவெல்லாம் நீடூழி வாழி  வாழி
            நெஞ்சமதில் இறை பக்தி போங்க வாழி
இறையருட் பூங்குடி பாணாவிடையும் வாழி
           இராமலிங்கேஸ்வரரும் வாழி









Samstag, 28. März 2015

திருவிழா உபயகாரர்கள்

____திருவிழா உபயகாரர்கள் _____________________-

i.முத்தர் குழு .-போ-மதியாபரணம்
2.பொ.சிவமணி வேலணை
3.சி.நல்லதம்பி குழு
4.திருமதி நா.இ.அருணாசலம்  குழு
5.நா.ஜெயக்குமார் (பாபு-சுவிஸ் )
6.திருமதி க.மார்க்கண்டு புங்குடுதீவு
7.முருகர் குழு பொ.கந்தையா
8.காசிநாதர் குழு   இ.பேரம்பலம்
9.ஆ.பேரின்பநாதன் உறவினர்கள்
10.க.சோமஸ்கந்தர் குழு கு.முத்துக்குமார்
11.பொ.பாலசிங்கம் குழு
வைரவர் மடை சே.கேதீஸ்வரன்
ஐயனார் அபிசேகம் சி.க.நல்லையா கனடா 

வரலாறு

பர்வதவர்த்தினி சமேத இராமலிங்கேஸ்வரர்

யாழ்ப்பாணத்தின் மேற்கு திசையில் அமைந்திருக்கின்ற சப்த தீவுகளில் ஒன்றான புங்குடுதீவிலேயுள்ள ஊரதீவிலே
ஐந்திணைச் சூழல் கொண்ட பாணாவிடை என்னுமிடத்தில் இலிங்க வடிவிலே அருவுருவமாய் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கிறார் பர்வதவர்த்தினி சமேத இராமலிங்கேஸ்வரப்பெருமான். இவ்வாலயத்தின் தோற்றம் பற்றிய வரலாறு தெளிவின்றி இருப்பினும் இது ஒரு பழமையான தலமென்பது குறிப்பிடத்தக்கது.
இங்கே நிலவிவரும் மரபுவழிக்கதைகள் பிரகாரம், தீவகத்தை பூர்வீகமாகவும் வண்ணார்பண்ணையிலே வசித்து வந்தவருமான மருதப்பு என்பார் 1910ம் ஆண்டு தமிழ்நாட்டின் இராமேஸ்வரம் திருப்பதிக்கு சென்று சிவனை வழிபட்டு வந்தார். ஒரு நாள் இராமலிங்கேஸவரப்பெருமான் இவர்கனிவிலே தோன்றி புங்குடுதீவுக்காட்டிலே தன்னை வந்து தரிசிக்குமாறு கூறியருளினார். இவர் உடனேயே புங்குடுதீவிற்கு திரும்பிவந்து நீள்சதுரவடிவில் சிவலிங்கமாய் எழுந்தருளியிருந்த இராமலிங்கேஸவரரை கண்டானந்தித்தார். இந்நிகழ்வு 1911இலே நடைபெற்றதாக கூறுவர். மருதப்புவை ஊரார் மருதப்பு சுவாமியென அழைத்து மகிழ்ந்தனர்.
சிவத்தொண்டராகிய மருதப்பு சுவாமிகள் அந்த ஆண்டிலேயே திருநாவுக்கரசு சுவாமிகளை நினைவுகூர்ந்து சரியைத்தொண்டினைச் செய்யும் வகையில் சித்திரைச் சதயத் தினத்தன்று திருநாவுக்கரசு சுவாமிகளின் குருபூசையை ஆரம்பித்தார். அக்காலகட்டத்தில் அவ்வூரிலே வாழ்ந்த சிவத்தொண்டராகிய மாணிக்கம் என்பார் மருதப்பு சுவாமிகளுக்கு உறுதுணையாய் நின்றார். நன்னீர் பற்றாக்குறையாக இருந்த அவ்விடத்திலே தண்ணீர்ப்பந்தல் அமைத்து சேவையாற்றி வந்தார். இச்சேவையானது அவரது சந்ததியரால் நீண்டகாலம் வரை நடைபெற்று வந்தது. இக்காலப்பகுதியிலே அலயத்தின் முன்னிருந்த காணியை அதன் உரிமையாளர்கள் ஆலயத்திற்கு சாசனம் செய்து கொடுத்தனர்.
மாணிக்கம் அவர்கள், 1930ம் அண்டிலே சிறார்கள் கல்வி கற்பதற்கென ஆலய வளவில் திருநாவுக்கரசு வித்தியாலயத்தையும் ஆரம்பித்து அன்னதான மடத்தையும் அமைத்தார். இராமலிங்கேசுவரரைநாடி மக்கள் வந்து தம் இன்னல் போக்கி சென்றார்கள். ஆலயம் சிறிது சிறிதாக திருப்பணி செய்யப்ட்டு 1948இலே இறைவன் திருவருளால் மகா கும்பாபிடேகம் நடைபெற்றது. கும்பாபிடேகம் அவ்வூர் மக்களை கொண்ட பரிபாலன சபையால் நடாத்தப்பெற்றது. மருதப்பு சுவாமிகள் நல்ல வழிகாட்டியாய் இருந்து வந்தார். தொடர்ச்சியாக ஆலயம் பல திருப்பணிகளை கண்டு 1980ம் வருடம் இரண்டாவது கும்பாபிடேகம் நடைபெற்றது.
தொடர்ச்சியாகவும் பல பெருந்திருப்பணிகள் செய்யப்பட்டு 2002ம் வருடம் பங்குனி மாதம் மூன்றாவது கும்பாபிடேகம் நடைபெற்றது. இவ்வாலயத்தின் முற்பகுதியிலே பூரணை புட்கலை சமேத ஐயனார் ஆலயமும் இருக்கின்றது. இதனால் இவ்வாலயத்தை ஊரார் ஊரதீவு ஐயனார் எனவும் அழைத்தின்புறுவர். இவ்வையனார் ஆலயம் 1850ம் வருடம் அமைக்கப்பட்டதாக அறியப்படுகின்றது.
இவ்வாலயதிற்கு சிறிது தொலைவிலேயே மருதப்புசுவாமிகளின் சமாதிக்கோவிலும் அமைக்கப்பட்டுள்ளது.